Today

கிண்டி மேம்பால தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து –

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தீனதயாளன் என்ற இளைஞர் இன்று நள்ளிரவு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கிண்டி மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மேம்பால தடுப்புச் சுவற்றில் வேகமாக மோதியதில், தீனதயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மற்றொரு இளைஞர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து…

மேலும் படிக்க

சென்னையில் பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்!

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினா, சாந்தோம் பெசன்ட் நகர்,…

மேலும் படிக்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா –

மதுரையின் புகழுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். இக்கோயிலில் மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் எனும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் விதமாக இந்த தேர் திருவிழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மதுரை மீனாட்டி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர தேர் திருவிழா இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சுந்தரேசுவரர்- பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும்…

மேலும் படிக்க

ரூ.20 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் 

அசாமில் ரூ.20 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசும், போலீசாரும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும், இவை தொடர்ந்து நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சாலை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சிறப்பு…

மேலும் படிக்க

மருத்துவ கழிவுகளை கொண்டு செல்ல லாரிகளுடன் வந்த கேரளா அதிகாரிகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தமிழக அரசு வழக்கறிஞர், ‘கேரளத்திலிருந்து லாரிகளில்…

மேலும் படிக்க

முதல்-அமைச்சர் தலைமையில் இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 2026…

மேலும் படிக்க

வசூலில் மாஸ் காட்டும் PUSHPA 2 –

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது. மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம்…

மேலும் படிக்க

8 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு, கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படுகிறது. கும்பக்கரை அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சுற்றுலா வருவது வழக்கம். இந்த சூழலில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா…

மேலும் படிக்க

பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் ஜாமீன் மறுப்பு

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவருக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர்.கடந்த சில நாட்களாக நடிகர் மோகன்பாபுவுக்கும் மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் மாறி மாறி தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த புதன் கிழமையன்று(11.12.2024) மனோஜ் மஞ்சு, மோகன் பாபு வீட்டிற்குள் சில ஆட்களுடன் நுழைய முயன்றிருக்கிறார். ஆனால்.மோகன்…

மேலும் படிக்க

“ஈரோடு இடைத்தேர்தல் இந்தியா கூட்டணி வசமாகும்” 

கோவையை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடல் நலக்குறைவால் கடந்த டிச.10ஆம் தேதியன்று காலமானார். இந்நிலையில் இன்று அவரது வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கிய இரா. மோகன், சாதாரண நகரக் கழக செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி திமுகவிற்கு பெருமை சேர்த்தவர். அவருடைய மறைவு என்பது கோவை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, திமுகவிற்கு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram