Today

SQUIDGAME சீசன் 2 வெளியானது!

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? உடனடியாக கொல்லப்படுகிறார்கள். ஒரு சிறிய கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்ட இத்தொடருக்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியாவிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்த…

மேலும் படிக்க

“கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!

“சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும்…

மேலும் படிக்க

சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்! 

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்தவர். இந்நிலையில் தற்போது அண்டார்டிகா கண்டத்தில் 16 ஆயிரம் அடி உயரமுள்ள மவுண்ட் வின்சன் என்ற சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தற்போது இந்த மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தை ஏறியதாக கூறினார். இந்நிலையில் முத்தமிழ்ச்செல்விக்கு அமைச்சர்கள் மற்றும்…

மேலும் படிக்க

தங்கம் விலை சற்று உயர்வு –

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று…

மேலும் படிக்க

கிண்டி மேம்பால தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து –

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தீனதயாளன் என்ற இளைஞர் இன்று நள்ளிரவு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கிண்டி மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மேம்பால தடுப்புச் சுவற்றில் வேகமாக மோதியதில், தீனதயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மற்றொரு இளைஞர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து…

மேலும் படிக்க

சென்னையில் பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்!

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினா, சாந்தோம் பெசன்ட் நகர்,…

மேலும் படிக்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா –

மதுரையின் புகழுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். இக்கோயிலில் மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் எனும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் விதமாக இந்த தேர் திருவிழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மதுரை மீனாட்டி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர தேர் திருவிழா இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சுந்தரேசுவரர்- பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும்…

மேலும் படிக்க

ரூ.20 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் 

அசாமில் ரூ.20 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசும், போலீசாரும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும், இவை தொடர்ந்து நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சாலை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சிறப்பு…

மேலும் படிக்க

மருத்துவ கழிவுகளை கொண்டு செல்ல லாரிகளுடன் வந்த கேரளா அதிகாரிகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தமிழக அரசு வழக்கறிஞர், ‘கேரளத்திலிருந்து லாரிகளில்…

மேலும் படிக்க

முதல்-அமைச்சர் தலைமையில் இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 2026…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram