Category: NEWS

“நீ என் சூப்பர் ஸ்டார்” ஜாக்குலினுக்கு சுகேஷ் உருகி உருகி காதல் கடிதம்..!!

தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிறந்தநாளையொட்டி உருகி உருகி தன் கைப்பட காதல் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். சிறையில் இருந்தாலும்…

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட…

நிலத்தகராறில் ரவுடியை அனுப்பி தாக்கியதில் கார் மெக்கானிக் பார்வை பறிபோனது

சென்னை பேசின்பிரிட்ஜ் தங்கசாலை பகுதியை சேர்ந்தவர் தீபேஷ்(வயது 27). இவர், செங்குன்றத்தை அடுத்த தண்டல் கழனி பகுதியில் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 4-ந்தேதி குடிபோதையில் வந்த 2 பேர் தீபேசை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வலது…

பிரம்பால் அடித்த ஆசிரியை..!!காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி..!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இங்கு ஆங்கில…

நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும்..!!

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, பாஜகவுக்கு இந்திய இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஊழல், முறைகேடு, மோசடி இல்லாத இந்தியாவை நாங்கள்…

கவர்னரை வரவேற்ற கலெக்டர்..!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை புரிந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கலெக்டர் முருகேஷ் புத்தகம் வழங்கி வரவேற்ற போது எடுத்த படம். NEWS EDITOR : RP

கணவருடன் தகாத உறவு..!! தங்கையின் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட அக்கா..!!

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சாஸ்திரி பூங்கா பகுதி. இங்குள்ள புலாந்த் மஸ்ஜித் அருகில் சகோதரிகளான சோனு (30) மற்றும் அவர் தங்கை சுமைலா வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். தன் கணவருக்கும் தன் தங்கை சுமைலாவிற்கும்…

நவீன கருவிகளை பயன்படுத்தி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வது குறித்த பயிற்சி முகாம்..!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்களுக்கான பணிப்பாதுகாப்பு தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின்…

அசாமில் 15 வயது பள்ளி மாணவன் கடத்தி கொலை..!!

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரின் பெல்டோலா பகுதியில் கடந்த 8-ம் தேதி பள்ளி சென்று வீடு திரும்பி கொண்டிருந்த மாணவன் (வயது 15) கடத்தப்பட்டான். கடத்தல்காரர்கள் மாணவனின் பெற்றோரிடம் 24 மணி நேரத்திற்குள் ரூ.60 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையென்றால் உங்கள்…

கோழிப் பண்ணையில் பற்றி எரிந்த தீ! 3,000-க்கும் மேற்பட்ட கோழிகள் கருகி உயிரிழப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முசரவாக்கம் – முத்துவேடு சாலை கன்னியம்மன் கோவில் பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது கோழி பண்ணையில் 3 ஆயிரம் பிராய்லர் கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்த…

WhatsApp
YouTube
Instagram
Telegram