Today

Media

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் –

மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஏற்பட்டால் ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் இந்த திட்டம் வகை செய்கிறது.திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மசோதாவை நடப்பு நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் தாக்கல்…

மேலும் படிக்க

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று பிற்பகல் 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231…

மேலும் படிக்க

சென்னையில் 14 விமானங்களின் சேவை பாதிப்பு!

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால், இன்று (டிச.12) சென்னை…

மேலும் படிக்க

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் –

நடிகர் ரஜினிக்காந்த் 1975ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். அபூர்வ ராகங்கள் எனும் படத்தில் அறிமுகமாகிய அவர், பல ஹிட் திரைப்படங்களை கொடுத்ததோடு சில தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஆனால் அவரது உழைப்பு மற்றும் திறமையினால் ஆக்ஷன் ஹீரோ மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து 50 ஆண்டுகால சினிமா பயணத்தில், கருப்பு – வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3-டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முக்கிய நடிகர்…

மேலும் படிக்க

ஊற வைத்த உலர் திராட்சை உடலுக்கு ஆரோக்கியத்திற்கு கொடுக்கின்றன.

உலர் திராட்சை உடலுக்கு ஆரோக்கியத்திற்கு கொடுக்கின்றன. மேலும் அவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த நீரை குடிக்கும் போது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கொடுக்கின்றன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.ஊட்டச்சத்துக்கள்: உலர் திராட்சைகளில் வைட்டமின்கள், மினரல்கள், இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கின்றன. செரிமானம்: உலர் திராட்சையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன. ஊக்கம்: திராட்சைகளில் இயற்கையாகவே இனிப்பு இருப்பதால்…

மேலும் படிக்க

மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டதில் வீட்டில் இருந்த 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதையடுத்து புயல், மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். இதற்கிடையே அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்…

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை ~ தமிழக வெற்றிக் கழகம்..!!

திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வேட்புமனுதாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும்.  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும்.  மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை…

மேலும் படிக்க

தேர்தல் முடிவுகள் பாஜகவின் உண்மை நிலையை உணர்த்திவிட்டன..!!

அதீத நம்பிக்கையுடன் இருந்த பாஜக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதார்த்த உண்மையை உணர்த்தியுள்ளன. மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைப் பிடிப்பது என்ற பிரதமர் மோடியின் அழைப்பு தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்பதையும், அது எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதையும் அவர்கள் உணரவில்லை. களத்தில் கடும் உழைப்பின் மூலமே இலக்குகளை எட்ட முடியுமே தவிர, சமூக ஊடகங்களில் போஸ்டர்களையும் தற்படங்களையும் பகிர்வதால் எட்ட முடியாது. மாயையில் சிக்கிய பாஜக தொண்டர்களும் தலைவர்களும் நரேந்திர மோடியின் செல்வாக்கில்…

மேலும் படிக்க

ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற விருப்பம்..!!

மனிதராக இருக்கும் நீங்கள் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறுவீர்களா?.. நமக்கெல்லாம் நாயை பிடித்தாலும் இவ்வளவு செலவு செய்து நாயாக மாறமாட்டோம். ஆனால் கடந்த வருடம் ஜப்பான் நாட்டை சேர்ந்த டோகோ என்ற நபர் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறினார்.  ‘I want to be an animal’ என்ற யூடியூப் சேனலையும் இவர் வைத்துள்ளார்.  இவரின் இந்த செயல் அப்போது பெரும் பேசுபொருளாகியது.தற்போது நாயாக இருக்கும் டோகோ பாண்டா,  கரடி,  பூனை…

மேலும் படிக்க

பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை…!!

 திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பையில் நீர்க் கட்டி இருப்பதாகக் கூறி அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.  அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பெண்ணிற்கு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.பின்னர் வேறு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.  இதில், அவரது கருப்பை அகற்றப்பட்டதும்,  வயிற்றில் மருத்துவத் துணி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனது அனுமதியின்றி கருப்பையை அகற்றியதுடன்,  வயிற்றில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram