Today

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் –

மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஏற்பட்டால் ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் இந்த திட்டம் வகை செய்கிறது.திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மசோதாவை நடப்பு நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் தாக்கல்…

மேலும் படிக்க

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று பிற்பகல் 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231…

மேலும் படிக்க

சென்னையில் 14 விமானங்களின் சேவை பாதிப்பு!

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால், இன்று (டிச.12) சென்னை…

மேலும் படிக்க

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் –

நடிகர் ரஜினிக்காந்த் 1975ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். அபூர்வ ராகங்கள் எனும் படத்தில் அறிமுகமாகிய அவர், பல ஹிட் திரைப்படங்களை கொடுத்ததோடு சில தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஆனால் அவரது உழைப்பு மற்றும் திறமையினால் ஆக்ஷன் ஹீரோ மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து 50 ஆண்டுகால சினிமா பயணத்தில், கருப்பு – வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3-டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முக்கிய நடிகர்…

மேலும் படிக்க

ஊற வைத்த உலர் திராட்சை உடலுக்கு ஆரோக்கியத்திற்கு கொடுக்கின்றன.

உலர் திராட்சை உடலுக்கு ஆரோக்கியத்திற்கு கொடுக்கின்றன. மேலும் அவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த நீரை குடிக்கும் போது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கொடுக்கின்றன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.ஊட்டச்சத்துக்கள்: உலர் திராட்சைகளில் வைட்டமின்கள், மினரல்கள், இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கின்றன. செரிமானம்: உலர் திராட்சையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன. ஊக்கம்: திராட்சைகளில் இயற்கையாகவே இனிப்பு இருப்பதால்…

மேலும் படிக்க

மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டதில் வீட்டில் இருந்த 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதையடுத்து புயல், மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். இதற்கிடையே அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்…

மேலும் படிக்க

பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது ~ அஜித்..!!

அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்குடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.கடந்த வாரம் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தின் டீசர் யூடியூபில்…

மேலும் படிக்க

இந்தோனேசியா : ஜாவா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்..!!

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மாயமாகினர். மழை வெள்ளத்தில் சிக்கி மாயாமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இந்த…

மேலும் படிக்க

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 -க்கு விற்பனை..!!

மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் குஜராத்தில் இருந்தும் தமிழ்நாட்டின் பல சந்தைகளுக்கு முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. தற்போது மழை காலம், பனிப்பொழிவு என்பதால் முருங்கை வரத்து வெகுவாக குறைந்துள்ளது. முருங்கை பிஞ்சுகள் கீழே உதிர்ந்து விழுவதால் முருங்கை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.1 கிலோ முருங்கைக்காய் ரூ.400 வரை விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் 1 கிலோ முருங்கைக்காய் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனையான ஒரு கிலோ முருங்கைக்காய் இன்று…

மேலும் படிக்க

மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்..!!

தொடர் கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மலேசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட்(224 மில்லியன் டாலர்) செலவாகும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இதே…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram