Month: September 2023

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்..!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் கும்பக்கரை…

ஆன்லைன் கேம் மூலம் பழக்கம் ஏற்பட்ட சிறுமியிடம் 12 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிய வாலிபர் கைது..!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஆன்லைனில் பிரீபயர் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். இந்த விளையாட்டு மூலம் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் வேல்முருகன் (வயது 22), என்பவருடன் சிறுமிக்கு பழக்கம்…

மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!!

வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும்…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்..!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ‘ஆசிரியர் தின விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடுமுழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும்…

தமிழ் மொழியை நேசிக்கிறேன் என சீன பெண் இலக்கியா தெரிவித்துள்ளார்..!!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக ஊடகங்களில் சீனப் பெண் இலக்கியா மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் தமிழ் துறை தலைவர் கலைமகள் செய்தியாளர்களை சந்தித்தனர். உங்களுக்கு தாய் மொழி தமிழ். நீங்கள் தமிழ் மொழியை நேசிக்கிறீர்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். இலக்கியா…

“சிம்பு 48” திரைப்படம் குறித்த அப்டேட்டை இயக்குநர் ‘தேசிங்கு பெரியசாமி’ வெளியிட்டுள்ளார்..!!

வெந்து தணிந்தது காடு பத்து தல உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சிம்பு 48 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற முதல் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த தேசிங்கு பெரியசாமி…

பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ்-இன் குழு-6..!!

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து…

பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்..!!

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் சீ கிங் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் மீண்டும் தரைக்கு திரும்பும் போது தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் மூன்று பேர்…

கடைசி வர்த்தக நாளில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.236ல் தொடங்கி 233.65 ரூபாயில் நிலைபெற்றது : ஜியோ

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகளின் வர்த்தகத்திற்கான வரம்பை (பிரைஸ் பேண்ட்) மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்இ) மாற்றியமைத்தது. அதாவது பிரைஸ் பேண்டை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக திருத்தியது. இதேபோல் ரெயில்டெல் உள்ளிட்ட 9 நிறுவனங்களின் பிரைஸ் பேண்டும் மாற்றியமைக்கப்பட்டது.…

தீவிரவாத தாக்குதல்களில் 83% அதிகரிப்பு : பாகிஸ்தான்..!!

பாகிஸ்தானில் வடமேற்கு, தென்மேற்கு பகுதிகளில் இடைவிடாது அதிகரித்து வரும் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அந்த நாட்டின் பிரபல சிந்தனை அமைப்பு வெளியிட்ட மாதாந்திர தரவுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.இஸ்லாமாபாத் நகரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘பாகிஸ்தான்…

WhatsApp
YouTube
Instagram
Telegram