Month: July 2023

குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு..!!

குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் தாமதமாக ஜூன் இறுதியில் தொடங்கியது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மதியத்திற்கு மேல் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க…

மணிப்பூரில் ராணுவ முகாமில் அத்துமீறி நுழந்து ஆயுதங்களை திருட முயன்ற கும்பல்..!!

மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் உள்ள காங்காபோக் என்ற இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஆயுதங்களை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. அப்போது பாதுகாப்பு வீரர்களுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.…

தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன..!!

போலீஸ் நிலையத்தில் இருந்த கஞ்சாவை எலிகள் தின்றதாக சப்-இன்ஸ்பெக்டர் அளித்த சாட்சியத்தை தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைதான இருவரை விடுதலை செய்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு கூறியது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக கைதானவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘பறிமுதல் செய்யப்பட்டதாக…

கேரளாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீட்பு..!!

கேரளா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை – அச்சன்கோவில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மாவட்டம் தோறும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.…

குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய மைனர் சிறுமி

பீகாரில் கயா நகரில் வசித்து வரும் மாணவர் ரிஷப். ஜே.இ.இ. பொறியியல் தேர்வுக்கு தயாராகி வந்து உள்ளார். சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் மைனர் சிறுமி ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 26-ந்தேதி நேரில் வந்து…

இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது

மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோவை…

8 மாத பெண்குழந்தையை 800 ரூபாய்க்கு விற்ற பெண்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு. இவரது கணவர் முசு தமிழ்நாட்டில் பணிபுரிகிறார். கராமி முர்முவுக்கு சமீபத்தில் 2-வது பெண்குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது என்று நினைத்த பெண் கராமி முர்மு,…

படப்பிடிப்பின்போது காயம் நடிகர் ‘ஷாருக்கானுக்கு’..!!

அமெரிக்காவில் படப்பிடிப்பு ஒன்றுக்காக ஷாருக்கான் சென்றிருந்தார் . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு…

மசினகுடி ~ மாவனல்லா இடையே எம்.எல்.ஏ. காரை மறித்த கரடியால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவனல்லா பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் கூடலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாரடைப்பால்…

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு ~ ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு..!!

கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அவரது மாமியார் பெயரில் பதிவு செய்ததாக பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி,…

WhatsApp
YouTube
Instagram
Telegram